original text at mamqa.com/ulyricsnew/bharadwaj-maargazhiyil-1801451
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
பாயில்லாம படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோட இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்ப எம்பேரில் ஒலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடு மனை ஏதுமில்ல
ஊருக் குருவிக்கு தாசில்தார் தேவையில்ல
சில்லுனு காத்து சித்தோட ஊத்து
பசிச்சாக் கஞ்சி
படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்க வல இடமா சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
காசுபணம் சந்தோஷம் தருவதில்ல
வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல
போதுமென்னும் மனசப்போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்ப மர நிழலு
விசிலடிக்கும் குயிலு
மாட்டு மணிச் சத்தம்
வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப் போல சுகமான ஆள் இருந்தாக் காமி
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
பாயில்லாம படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோட இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்